Wednesday, March 30, 2005

 

RAM

RAM என்றவுடன் ராண்டம் ஆக்ஸஸ் மெமரி என்று நினைக்கவேண்டாம்; இது அமீரின் ராம் திரைப்படத்தைப்பற்றிய விமர்சனம்...

நீண்ட நாட்களுக்கு பிறகு சென்ற ஞாயிற்றுக்கிழமை நானும் என் குடும்பத்தாரும் உல்லாசமாக வெளியே சென்றோம். என் அலுவலக நண்பரின் உதவியால் உதயம் தியேட்டரில் ராம் திரைப்பட்த்திற்கு ஐந்து டிக்கட் கிடைத்தது. பகல் காட்சி வேறு. என்னுடைய வற்புறுத்தலால் அனைவரும் வெயிலை பொருட்படுத்தாமல் வந்தனர். இத்திரைப்ப்டத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்லிவிடலாம். அதாவது தாயைக் கொன்றவன் மகனே என்று படம் ஆரம்பிக்கிறது; இறுதியில் உண்மையான கொலைக்காரனை கண்டுபிடிக்கிறான் மகன். ராம் கதாபாத்திரத்தை கனகச்சிதமாய் செதுக்கியிருக்கிறார் ஜீவா. இது அவருக்கு மூன்றாவது படம். இப்படத்தில் அழகாக கண்களை திறந்துக்கொண்டு நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் எப்படிப்பட்டதென்றால் கோபமோ, சந்தோஷமோ இரண்டையுமே உச்சத்தில் காட்டுகிறார்; குறிப்பாக அவருடைய மேனரிஸம் (செய்கை) மார்பை முன்பாக தள்ளிய நடையும், அகன்ற விழிகளும், தலையை ஆட்டும் விதமும், இயக்குநர் அமீர் நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். அடுத்ததாக சாரதாம்மா(சரண்யா)ராமுடைய அம்மாவாகவே வாழ்ந்திருக்கிறார்.பள்ளி ஆசிரியை என்பதால் ஓரிரண்டு காட்சிகள் பள்ளியில் எடுத்திருக்கிறார்கள்.

கதாநாயகி கஜாலா எப்பொழுதுமே கண்ணில் கிளசரினுடன் வலம் வருகிறார். ஆனால் மரத்தச்சுற்றி ஆடுவது, மழையில் வெள்ளை ஆடையுடன் வலம் வருவது, நகைச்சுவை என்ற பெயரில் ஆபாச வசனங்கள் போன்ற கோலிவுட் கோமாளித்தனங்களை மீறி ராம் எடுத்ததற்கு அமீருக்கு ஒரு "ஓ" போடவேண்டும்.

வாழவந்தான் கதாபாத்திரத்தில் கலக்கியிருக்கிறார் கஞ்சா கருப்பன். இவரைப் பற்றி தனியே அடுத்த தலைப்பிலே பார்க்கலாம். ரஹ்மான் மீண்டும் வெள்ளித்திரையில்... கோபம்,சந்தோஷம்,நக்கல் போன்ற அனைத்தயும் கச்சிதமாய் செய்திருக்கிறார். அவருக்கு உதவியாக மலையாள நடிகர் முரளி(தமிழ் நடிகர் ராஜேஷின் குரலில்) ஜொலிக்கிறார். ரஹ்மான் மீது அப்படி என்ன கோபமோ? இயக்குநருக்கு... சொல்ப காட்சிகளிலேயே சாகடித்துவிடுகிறார். பிரத்தாப்போத்தனும் வந்து போகிறார். மொத்தத்தில் ஒன்றரை வருட உழைப்பை, கனவை நனவாக்கியிருக்கிறான் இந்த ராமகிருஷ்ணன் என்கிற ராம்.

இரண்டு மணிக்கு தியேட்டரை விட்டு வெளியே வந்தோம். சூரிய பகவான் சுட்டெரித்துக்கொண்டிருந்தார். எனவே ஆட்டோவில் செல்லலாம் என்று அணுகினால் உதயத்திலிருந்து கேஸவர்த்தினிக்கு(செளத்ரி நகர்) செல்ல அநியாயக்காரன் 60 ரூபாய் கேட்டான். இன்னொரு ராம் உருவாகவேண்டாம் என்று என் மாமா சொன்னதால் அவனிடம் பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தோம். பிறகு ஒருவழியாக 35 ரூபாய்க்கு வீடு போய்ச் சேர்ந்தோம்.

Thursday, March 24, 2005

 

TASMAC

சட்டசபையில் என்னதான் நடக்கிறது? என்று பார்க்க வெகுநாளாகவே எனக்கு ஒரு ஆசை.

இதற்காக அலுவலகத்திற்கு விடுப்பு போடமுடியுமா என்ன? ஒரு தனியார் தொலைக்காட்சியின் கைங்கர்யத்தில் இரவு 11 மணிக்கு சில நாட்கள் சட்டசபையின் தொகுப்பை விரும்பி பார்ப்பேன். சமீபத்தில் பார்த்த சில காட்சிகளின் தொகுப்பை இங்கே அளிக்கிறேன்.

இவ்விஷயம் மிகவும் அவசியமா? இல்லையா? என்று ஒவ்வொருவரும் எண்ணவேண்டும்!!

அரசு மதுக் கடைகள் மூலம் ரூ. 5,441 கோடிக்கு 'உ.பா' விற்பனை

அரசே நடத்தும் மதுக் கடைகள் மூலம் (டாஸ்மாக் கடைகள்) ரூ. 1,514 கோடி அளவுக்கு கூடுதலாக 'உற்சாக பான' விற்பனை நடந்துள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

தமிழக சட்டசபையில் மது விலக்கு ஆயத்தீர்வை மற்றும் வருவாய்த்துறைக்கான மானியக் கோரிக்கைகளை அமைச்சர் ஓ.பி. தாக்கல் செய்து பேசினார்.

அவர் கூறுகையில், தமிழகத்தில் தனியார் கடைகள் மதுபான விற்பனையை மேற்கொண்டபோது, டாஸ்மாக் கடைகளின் மூலம் ரூ. 3,877 கோடி அளவுக்கு மட்டுமே மது பான விற்பனை இருந்தது.

தற்போது அரசே நேரடியாக நடத்தும் டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபான விற்பனை மூலம் கிடைக்கும் தொகை ரூ. 5,441 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒராண்டுகால மது விற்பனையின் மூலம் கூடுதலாக கிடைத்துள்ள தொகை ரூ. 1,564 கோடியாகும்.

இந்த 11 மாத காலத்தில் மட்டும் கூடுதலாக ரூ. 1,514 கோடி அளவுக்கு மது விற்பனை நடந்துள்ளது. நடப்பாண்டில் மது பான விற்பனை அளவு 176.16 லட்சம் பெட்டிகள் ஆகும். முந்தைய நிதியாண்டில் இது 143.06 லட்சம் பெட்டிகளாக இருந்தது.

நடப்பு நிதியாண்டில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 33.10 லட்சம் பெட்டிகள் கூடுதலாக விற்றுள்ளது. இது மகத்தான சாதனையாகும்.

தமிழகத்தில் 4,016 மதுபான கடைகளில் பார் வசதி உள்ளது. டாஸ்மாக் கடைகளிலும், பார்களிலும் 33,600 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். 21 வயதுக்குக் குறைந்தவர்களுக்கு மதுபானம் விற்க தடை செய்யப்பட்டுள்ளது என்றார் ஓ.பன்னீர் செல்வம்.

முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே மகாராஷ்டிரத்தில் தான் அதிக அளவு மது விற்பனையாகிறது. அங்கு பூரண மது விலக்கை ஆளும் காங்கிரஸ் கொண்டு வருமா? என்று கேட்டார்.

தொடர்ந்து பேசிய ஞானசேகரன், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதியாக தலைவர் மற்றும் 11 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அரசுப் பணிகளுக்கு ஆள் எடுப்பதையே அதிமுக அரசு நிறுத்திவிட்டது. இந் நிலையில் தேர்வாணையத்துக்கும் எந்த வேலையும் இல்லை என்றார்.

அதற்கு பதிலளித்த ஜெயலலிதா, அரசுப் பணியாளர் தேர்வாணையம் எந்த வேலையும் செய்யாமல் இல்லை. இதன் மூலமாகத் தான் அரசு வழக்கறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,322 டாக்டர்களை இந்த ஆணையம் தேர்வு செய்துள்ளது. இவர்கள் அரது மருத்துவமனைகளில் பணியில் சேர்க்கப்படவுள்ளார்கள்.

மேலும் அரசு ஊழியர்கள் தொடர்பாக பல யோசனைகளை இந்த ஆணையம் வழங்கி வருகிறது. இதனால் அரசுப் பணிக்கு ஆள் எடுப்பதை நிறுத்திவிட்டதாகக் குற்றம் சாட்டுவது தவறு என்றார் ஜெயலலிதா.

மொத்தத்தில் தமிழ்நாட்டில் குடிமக்கள் பெருகிவருகிறார்கள்!! வேறுமாநிலத்திலிருந்து குடிபெயருவதால்கூட

Monday, March 21, 2005

 

March-21 National Forest Safety Day

Á¡÷î 21 - º÷ŧ¾º ÅÉ À¡Ð¸¡ôÒ ¾¢Éõ

þó¾ ·À¡Šð ·Òð Ô¸ò¾¢ø, ¿õÁ¢ø ±ò¾¨É §ÀÕìÌ þÂü¨¸¨Â ú¢ì¸ §¿ÃÁ¢Õ츢ÈÐ?
¬É¡ø ¿õ Óý§É¡÷¸û þÂü¨¸¨Â ¦¾öÅÁ¡¸ À¡Å¢ò¾¡÷¸û. þý¨È Ýú¿¢¨Ä§Â¡ ¾¨Ä¸£ú; ÝâÂÛìÌ À¨¼ììôÀÎõ ¦À¡í¸§Ä¡ À¢ÃŠËˆ Ìì¸Ã¢ø-Ý÷¡ §¸Š Š¼ùÅ¢ø ¦ºöÂôÀθ¢ÈÐ. ¬É¡ø þý¨ÈìÌõ ¸¢Ã¡ÁôÒÈí¸Ç¢ø þÂü¨¸ ¦¸¡ïÍõ ÝÆÄ¢ø¾¡ý ¦À¡í¸ø ¦¸¡ñ¼¡Î¸¢È¡÷¸û.

¯Ä¸ ¾ðÀ¦ÅðÀ ¿¢¨Ä¨Â ¸ðÎôÀ¡ðÊø ¨Åò¾¢ÕôÀ¾¢ø ¯Ä¸¢ý Á¢¸ô¦Àâ ÅÉôÀ̾¢Â¡É «§Áº¡ý ¸¡ðÎôÀ̾¢ ¦ÀÕõÀíÌ Å¸¢ì¸¢ÈÐ ±ý¸¢ýÈÉ÷ ¬Ã¡ö¡Ç÷¸û. þùÅ¡È¡É ÀÄ ÒûǢŢÅÃí¸¨Ç §¿ü¨È ¾¢ÉÁÄ÷ Å¡ÃÁÄâø ¦ÅÇ¢Åó¾Ð.
«ÅüȢĢÕóÐ º¢Ä.......

1984-ø ҧǡ⼡Ţø ´ÕÅ¢¾ À¡ìËâ¡šø À¡¾¢ì¸ôÀðÎ ²Ã¡ÇÁ¡§É¡÷ þÈó¾É÷. «¾üÌ ¸¡Ã½õ 18 Á¢øÄ¢Âý ¸¡ðÎ ÁÃí¸û «Æ¢ì¸ôÀð¼Ð¾¡ý ±ý¸¢ýÈÉ÷. ¯Ä¸¢ø 80 º¾Å¢¸¾ Áì¸û, ÁÕòÐÅò¾¢üÌ ÅÉí¸Ç¢ø ÅÇÕõ ¾¡ÅÃí¸¨Ç ¿õÀ¢§Â ¯ûÇÉ÷. þ¾É¡ø¾¡ý ¿ÁÐ ¿¡ðÊüÌ §¾¨ÅÂ¡É ÅÉôÀÃô¨À ¦ÀÕìÌõ §¿¡ì¸òмý þó¾¢Â «ÃÍ ÀÄ ¾¢ð¼í¸¨ÇÔõ, ºð¼í¸¨ÇÔõ þÂüÈ¢ÔûÇÉ÷.

¾Á¢Æ¸ò¾¢ý ÅÉôÀ̾¢¨Â «¾¢¸Á¡ì¸¢Â ¦ÀÕ¨ÁìÌâÂÅ÷ Å¢.±Š.¸¢Õ‰½ã÷ò¾¢ ±ýÀÅ÷. þÅ÷ 1956ø ¾Á¢ú¿¡Î ¸¡Î¸Ç¢ý ÅÉ ¾¨ÄÅḠþÕó¾¡÷. «ô§À¡Ð¾¡ý ¾Á¢Æ¸ò¾¢ý ÅÉòÐ¨È ÅÇ÷¦ÀüÈÐ.

¿£Ä¸¢Ã¢ ÁüÚõ ¦¸¡¨¼ì¸¡½Ä¢ø ÁðΧÁ ä¸Ä¢ô¼Š ÁÃí¸û ÅÇÕõ ±ýÀÐ 1950ø
¿¨¼Ó¨È¢ø þÕó¾Ð. 1957ø ¬Š¾¢§ÃĢ¡ ¦ºýÚ, º¡¾Ã½ ¿¢ÄôÀ̾¢¸Ç¢ø ÅÇÕõ
§ÅüÚŨ¸ ä¸Ä¢ô¼Š ÁÃì¸ýÚ¸¨Ç ¦¸¡ñÎÅóÐ À¢÷ ¦ºö¾¡÷ ¸¢Õ‰½ã÷ò¾¢.
«¾ýÀ¢È̾¡ý §ÀôÀ÷ ¦¾¡Æ¢ÖìÌ ìô ¦À¡ÕÇ¡¸ ÀÂýÀÎõ ä¸Ä¢ô¼Š ÁÃí¸û ¦ÀÕÁÇÅ¢ø ¾Á¢Æ¸ ÅÉôÀ̾¢¸Ç¢ø À¢÷ ¦ºöÂôÀð¼É. «ó¾ ä¸Ä¢ô¼Š §Ã¡ý áø þ¨Æ ¾Â¡Ã¢ì¸×õ À¢ÈÌ ÀÂýÀð¼Ð.

"¯ýÉ¡ø ÓÊÔõ ¾õÀ¢" ¾¢¨ÃôÀ¼ò¾¢ø ¯¾Âã÷ò¾¢¨Â Á¨ÈÓ¸Á¡¸ Á¡üÚõ º¨ÁÂø¸¡Ãò ¾¡ò¾¡¨Åô§À¡ø ¿¡õ ´ù¦Å¡ÕÅÕõ ¦ºÂøÀð¼¡ø ÅÇõ¦¸¡ïÍõ,ÅÉõ¦¸¡ïÍõ À¡Ã¾ò¨¾ ¯ÕÅ¡ì¸Ä¡õ.

Monday, March 14, 2005

 

BAD DEBTS

வங்கிகளில் வாராக்கடன் என்ற தலைப்பில் வருடந்தோறும் பல லட்சங்கள்/கோடிகள் நிலுவையில்உள்ளன. இவற்றில் பல நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களும் உள்ளன; ஆனால் சாமானியமக்களின் நிலைமையோ தலைகீழ். வங்கியில் பணமிருந்தாலும் காசோலை திருப்பி அனுப்பப்படுகிறது.

பொதுத்துறை வங்கிகளில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாத நிறுவனங்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 'பாலாஜி ஓட்டல் அண்ட் எண்டர்பிரைசஸ், இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ்' நிறுவனங்கள் உள்ளன.

பொதுத்துறை வங்கிகளில் மொத்தமுள்ள ரூபாய் 15 லட்சம் கோடி டெபாசிட் தொகையில் 3 லட்சம் கோடி வராக்கடனாக நிலுவையில் உள்ளது. கடந்த 1997ல் வராக்கடன் நிலுவை ரூபாய் 47 ஆயிரத்து 300 கோடியாக இருந்தது. 2004ல் இது 96 ஆயிரத்து 84 கோடியாக அதிகரித்தது. இடைப்பட்ட காலத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட கடன், நடப்பில் இருக்கும் கடன் மீதான வட்டி ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் வராக்கடன் தொகை ரூபாய் 3 லட்சம் கோடியாக நிலுவையில் உள்ளது.

கோடிக்கணக்கில் கடன் வாங்கிய பலர் அதை திருப்பி செலுத்தவில்லை. அவர்களில் பலர் அரசியல் பலம், செல்வாக்கு மிகுந்தவர்களாக உள்ளனர். பலர் மீது வழக்கே பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்த பல வழக்குகள் தொடர் நடவடிக்கையின்றி தூங்குகின்றன. இதனால், பொதுத்துறை வங்கிகள் நலிவடையும் ஆபத்து அதிகரிக்கிறது.

கடன் வாங்கி திருப்பி செலுத்தத் தவறியவர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யு.சி., பொதுச்செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா மற்றும் அகில இந்திய வங்கிப் பணியாளர் சங்கத் தலைவர்கள் நேற்று முன்தினம் இப்பட்டியலை வெளியிட்டனர். ரூ.350 கோடிக்கும் அதிகமான கடன் வாங்கி வழக்கே பதிவு செய்யப்படாத முதல் பத்து நிறுவனங்கள் பட்டியலில் தமிழக நிறுவனங்களும் உள்ளன.

நிறுவனங்கள் பெற்ற கடன் தொகை (ரூ.கோடியில்)

1. மாளவிகா ஸ்டீல் (மகாராஷ்டிரா) 1227
2. மாடர்ன் சின்டெக்ஸ் (மகாராஷ்டிரா) 867
3. பிரகாஷ் இண்ட்ஸ் (அரியானா) 725
4. லாயிட் ஸ்டீல் (மகாராஷ்டிரா) 595
5. உஷா இஸ்பட் லிமிடெட் (உ.பி.) 555
6. பாலாஜி ஓட்டல்ஸ் அண்ட்
என்டர்பிரைசஸ் (தமிழ்நாடு) 477
7. மபத்லால் இண்டஸ்ட்ரீஸ்
லிமிடெட் (ஆமதாபாத்) 440
8. இந்துஸ்தான் போட்டோ
பிலிம்ஸ் (தமிழ்நாடு) 422
9. டிசிஎம் லிமிடெட் (புதுடில்லி) 372
10. ஜே.கே. சிந்தடிக்ஸ் லிமிடெட்
(கான்பூர்) 352

நன்றி : தினமலர் நாளிதழ்

Monday, March 07, 2005

 

Metropolitan Transport Corporation

நம் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்ட விஷயம் பயணம். அதுவும் நடுத்தர வர்க்கம் என்றால் பேருந்து பயணம்; அதாவது "மாநரகப் பேருந்து". பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள் முதல் ஓய்வூதியம் பெறும் தாத்தாக்கள் வரை உபயோகிக்கும் ஒரு பயண ஊர்தி.

காலை மற்று மாலை வேளைகளில் Peak Hour என்று சொல்லப்படும் நேரத்தில் பேருந்து நேராகச் செல்வதற்கு பதில் படிக்கட்டுகள் சிங்கார சென்னையின் அழகு சாலைகளை முத்தமிட்டுக் கொண்டுதான் செல்கின்றன. குறிப்பாக புறநகர்வாசி என்றால் சொல்லவே வேண்டாம். குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேருந்துகள் மாற வேண்டியிருக்கும்.

ஏன் இந்த நிலைமை? அரசாங்கமும் பாவம் எவ்வளவோ திட்டம் போடுகிறது! செயல்பாட்டைத்தான் காணவில்லை! இப்பொழுதுகூட சட்டசபையில், மேலும் 2000 பேருந்துகள் அதிகரிக்கப் போவதாக அறிக்கை வாசித்தார்கள். ஒருவேளை அப்படியே நிறைவேறினால் போக்குவரத்துக்கு வழி எங்கே? தற்பொழுதுள்ள நிலைமையே சாலைகளில் ஊர்ந்து செல்வதுதான்; மேலும் வாகன எண்ணிக்கை அதிகரித்தால்!!

இந்த அவல நிலை மாற என்ன வழி?

சம்பந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?!

Thursday, March 03, 2005

 

. The 77th Oscar Awards:

முன்னுரை/அறிமுக உரை

வணக்கம். வலைதளம் என்னும் கடலில் என்னுடைய முதல் சிப்பி. இன்று முதல் (03.03.2005) என்னுடைய எண்ணங்கள், அனுபவங்கள், குமுறல்கள், இன்பங்கள் இன்னும் பலவற்றை பதிய வைக்க ஆவலுடன் உள்ளேன்.


All the world's a stage,
And all the men and women merely players:
- William Shakespeare

சினிமா உலகத்தினரின் விருது ஆசையை பூர்த்தி செய்வது "ஆஸ்கார்"தான். விருதில் "மேற்கத்திய சாயம்" பூசப்பட்டிருந்தாலும் இன்றளவில் சினிமா துறைக்கு மணிமகுடம் சூட்டும் ஒரே விருதாக விளங்குகிறது.

Feb. 27, 2005, ஞாயிற்றுக்கிழமை, அஸ்வினி நட்சத்திரம், சங்கடஹர சதுர்த்தி கூடிய தினத்தில் ஹாலிவுட் உலகின் ஒரு மைல்கல். அமெரிக்காவின் அழகிய நகரமான லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்றது ஆஸ்கர் விருது விழா.

விருது பட்டியலில் சில...

சிறந்த படம் : மில்லியன் டாலர் பேபி
சிறந்த இயக்குநர் : கிளின்ட் ஈஸ்ட்வுட் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த நடிகர் : ஜேமி பா·க்ஸ் (ரே)
சிறந்த நடிகை : ஹிலாரி ஸ்வாங்க் (மில்லியன் டாலர் பேபி)
சிறந்த வெளிநாட்டு படம் : தி சீ இன்சைட் (SPAIN)
சிறந்த ஆடை அலங்காரம் : சாண்டி பாலெல் (THE AVIATOR)

ஹிலாரி ஸ்வாங்க், இதன் மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை இரண்டு முறை பெற்ற நடிகைகளின் பெருமைமிகு பட்டியலில் இவரும் சேர்ந்தார். இதற்கு முன், "BOY'S DON'T CRY" என்ற படத்துக்காக இவ்விருதைப் பெற்றார்.

சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற கிளின்ட் ஈஸ்ட்வுட்டுக்கு 74 வயது. இவரும் இரண்டாவது முறையாக இவ்விருதை பெற்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் விருது கிடைத்த படம், இவரே தயாரித்து இயக்கிய "அன்பர்கிவன்" (Unforgiven) 1993.
விழாவின் மற்றுமொரு சிறப்பம்சம், இந்த 74 வயது இளைஞரின் தாயார் விழாவில் பங்குகொண்டு சிறப்பித்தார். அவருடைய வயது 96.

குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய தயாரிப்பாளர் அஸ்வின் குமாரின் 'LITTLE TERRORIST'க்கு விருது கிடைக்கவில்லை. ஆன்ட்ரேவின் "WASP" அதை பறித்துக் கொண்டது.

This page is powered by Blogger. Isn't yours?