Tuesday, August 30, 2005

 

Madras University

பல்கலைக்கழக பரீட்சை என்றாலே ஒருவித பயம் மனதுக்குள். ஏனென்றால் எவ்வளவு நன்றாக எழுதியும் மதிப்பெண் சரியாக வராததுதான்; சில சமயங்களில் அபத்தமாக 20 மார்க் வரும் என்று நினைப்பவருக்கு 70 மார்க் வந்துவிடும்; சிலருக்கோ 70 மார்க் வரும் என்று எதிர்பார்ப்பவருக்கு 20 மார்க் வரும். இந்த நிலைமைக்கு யார் காரணம்? ஏன் நடக்கிறது? என்று ஆராய்ந்தோமானால் ஏமாற்றமே மிஞ்சும்.

என்னுடைய உறவினரின் மகள் சமீபத்தில் B.Sc Maths இறுதியாண்டு பரீட்சை முடித்துவிட்டு வழக்கம்போல் ரிசல்ட்டுக்காகக் காத்துக்கொண்டிருந்தாள். நீ நன்கு படிக்கக்கூடியவள்; ஆகையால் ஏன் இப்படி பதட்டத்துடன் இருக்கிறாய் என்று வினவிக்கொண்டிருந்தார்கள். ரிசல்டும் வந்தது; எல்லாவற்றிலும் நல்ல மதிப்பெண்கள், ஒரு பேப்பரில் மட்டும் 30 மதிப்பெண்கள் என்று இருந்தது. அவ்வளவுதான், தான் பரீட்சையில் தோல்வியடைந்துவிட்டோம் என்று அழ ஆரம்பித்துவிட்டாள். குறை கூறும் நக்கீரர்களுக்கு சொல்லவும் வேண்டுமோ? துக்கம் விசாரிப்பதுபோல விசாரித்தார்களாம்.

ஆனால் அவள் மனதுக்குள் தான் நன்கு எழுதியதாகவே கூறிகொண்டிருந்தாள். எனவே கல்லூரியை நாடியபோது, நீங்கள் நேரிடையாக யுனிவர்சிட்டியில் சென்று மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார்கள். அதன்படியே விண்ணப்பித்தாள்; அதற்குள் அக்டோபர் மாதத்தில் தவறிய தாள்களை எழுத விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும் என்று கல்லூரியில் கூறியதால் அதற்கும் பணத்தை கட்டி விண்ணப்பித்தாள் அழுதபடியே!

இதற்கிடையே டோட்டல் மிஸ்டேக் என்று ஆங்கிலத்தில் கூறி மதிப்பெண்ணை மாற்றி சான்றிதழ் அளித்தனர். இப்பொழுது அவள் சந்தோஷமாக ஒரு வேலைக்கும் சென்றுக்கொண்டிருக்கிறாள்.
ஆனால் வழக்குரைஞர் பாஷையில் எவ்வளவு மன உளைச்சல், பண விரயம், நேர விரயம். இவற்றையெல்லாம் ஈடு செய்ய ஒரு கேஸ் போடக்கூடாதா என்று பலர் கேட்கின்றனர். அதற்கு அவள் அப்பா கூறிய பதில்: கேஸ் போட்டு என்ன பயன்? கோபத்தில் நாங்கள் மீண்டும் தவறான மதிப்பெண் அளித்துவிட்டோம் என்று இதனையும் மாற்றி விட்டால்..? என் பெண்ணின் நிலைமை என்னாகும்? எனவே கேசாவது ஒரு மண்ணாவது..

Comments:
கேஸ் போட்டால், அப்புறம் வரும் தேர்வுகளுக்கு மறுமதிப்பீடு செய்யும் யாருக்கும் பல்னே இருக்காது. பின்னே, 'அதிகமாப் போட்டாதானே வம்பு'ன்னு ±øÄ¡ ÁÚÁ¾¢ôÀ£ðÊÖõ «§¾ Á¾¢ô¦Àñ¸Ù¼ý Å¢ðÎÅ¢ð¼¡ø?
 
எனக்கு தெரிந்த வரையில் சரியாக படிக்காத மற்றும் மதிப்பிட்டு முறையை புரிந்து கொள்ளாத மாணவர்கள் மட்டுமே இது போல் புலம்புவார்கள்.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?