Tuesday, August 09, 2005

 

Pa. Vijay

சன் டி.வியின் தமிழ் மாலையில் பா.விஜயின் கவிதைத் தொகுப்புத் திருவிழாவிலிருந்து சில காட்சிகளை சனிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பினார்கள். ஒவ்வொரு தலைப்பு வீதம் மொத்தம் பன்னிரண்டு நூல்களை டாக்டர். கலைஞர் வெளியிட்டார்.

திருவிழா ஒரே அபத்தமாக இருந்தது. பாக்யராஜ் தான் அறிமுகப்படுத்திய ஒருவருக்கு திருவிழா என்பதில் பெருமைப்படுவதாகக் கூறினார். மேடையில் பலர் வந்து பேசினர். இதில் அபத்தத்தின் உச்சக்கட்டம் விவேக். யாருடைய கவிதைத் தொகுப்பை வெளியிடுகிறார்கள் என்றே தெரியாத அள்விற்கு விவேக் ஒரே கலைஞரைப் பாராட்டிக்கொண்டேயிருந்தார். அவ்வப்போது பா.விஜயைப் பற்றியும் பேசினார். வழக்கம்போல் திருமதி.ராதிகா டமிலை கொளை செய்து பேசினார். கமல்ஹாசன் தான் எவ்வாறு தமிழ் பயின்றேன் என்று விளக்கினார். கவிஞர் வாலியையும்,கலைஞரையும் பாராட்டிக்கொண்டேயிருந்தார். நடுவில் நடிகர் ஸ்ரீகாந்த்தையும் கூப்பிட்டு பேச வைத்தனர். கவிஞர் வாலியோ கலைஞருக்கு கவிதை வாசித்து அமர்ந்தார்.

அனைவரும் பேசிய பிறகு கலைஞர்தான் உண்மையாகவே பா.விஜய்க்கு பாராட்டு பத்திரம் வாசித்து வித்தகக் கவிஞர் என்று பட்டம் சூட்டினார். காமடியாக பேசுவதாக எண்ணி காமநெடியுள்ள ஆண்டொனி, கிளியோபாட்ரா கவிதையை பா.விஜய் எழுதியுள்ளதை எண்ணி புளகாங்கிதப்பட்டுக்கொண்டார். எண்பத்து இரண்டு வயதில் இம்மாதிரியான கவிதையை தானே ரசிப்பதாகவும் மற்ற அனைவரும் இன்னும் ரசிப்பார்கள் என்று கூறி திருவிழாவை முடித்து வைத்தார்.

Comments:
விஜய் இந்த திருவிழா அல்ல
இது நடிகர்களின் காக்கா பிடிக்கும் வேலை தன் இது.
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?