Thursday, April 07, 2005

 

NATURE

படித்ததில் பிடித்தது

சமீபத்தில் நான் படித்த கவிதைகளில் என்னை பாதித்த கவிதை ஷக்தி சேகரின் கைவண்ணத்தில் இதோ!!

இது கவிதை என்றால்
இயற்கைக்கு பெயரென்ன!

ஆஹா! எத்தனை அழகு! - அது
அன்பு மட்டும்தானா?
ஆசைக் கடலில் ஊற்றெடுக்கும்
அமுத வார்த்தைகளா!
இல்லை... இல்லை...
உண்மைக்கு இது மறுபெயரா?
இன்சொல் சொல்வாய் - உள்ளத்தில்
இனியெல்லாம் சுகமே.
இனிய செயல் செய்வாய்
பிறர் மனம் கனியவே!
இன்முகம் காட்டுவாய்
இதுதான் இயற்கை!
பொய்யும் புரட்டும் இல்லை
பொதுமை வேண்டிட
புதுமைகள் படைப்பாய்!
எல்லா ஜீவனுள்ளும்
என்றும் அமைதியைத் தருவாய்
எல்லையில்லா பேரின்பம் தரும் இறைவா!

இது கவிதை என்றால்
இயற்கைக்கு பெயரென்ன!

Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?