Wednesday, May 11, 2005

 

Once More

இந்த கோடை காலத்திற்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று மோர் அருந்துவது; இதனைப் பற்றியச் செய்தியை ஞாயிறு வாரமலரில் வெளியிட்டிருந்தார்கள். அவற்றிலிருந்து சில....

* நாக்கு வறட்சி, அதிக தாகம், போன்றவற்றை தணிப்பது மோர் மட்டுமே.
* நீருடன் புரோட்டீன் மற்றும் தாதுப்பு மோரில் உள்ளதால் வியர்வை மூலம் உடலிலிருந்து வெளியேறும் உப்பை மோர் மூலம் சுலபமாக பெறலாம்.
* மோரிலுள்ள 'லாக்டோபாஸிலஸ்' உடலில் ஏற்படும் கெட்ட வாசனை ஏற்படாமல் தடுக்கும்.
* மேலும் நம் உடல் எப்போதும் குளுகுளுவென்று இருக்கும்.
* ஒரு கப் பாலில் 300மி.கி கால்சியம் இருந்தால், ஒரு கப் மோரில் 450ம்.கி கால்சியம் இருக்கும்; இது 30 முதல் 50 சதவிகித ஒரு மனிதனின் அன்றாட தேவையான கால்சியத்தின் அளவு.
* பாலில் இருப்பதைவிட மோரில் அதிகளவு வைட்டமின் பி,பி2.பி3,பி6,ஏ,கே போன்றவைகள் உள்ளன.
* ஒரு கப் பால் சாப்பிட்டால் ஒரு மணி நேரம் கழித்து 30 சதவிகிதம்தான் செரிமானமாகியிருக்கும்
* ஆனால் ஒரு கப் மோர் அருந்தினால் 90 சதவிகதம் செரிமானமாகியிருக்கும்; இதற்குக் காரணம் லாக்டிக் அமிலம். மோரில் அது குறைவாக உள்ளது.
* தினமும் இரண்டு கப் மோர் அருந்துவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
* மோர், குடலில் உருவாகும் நச்சு பேக்டீரியாக்களை அழித்து, குடல் நோய்கள் வருவதை தவிர்க்கிறது.
* பல் நோய்களை தவிர்க்கும் ஆற்றல் மோருக்கு உண்டு என்பதை சுவீடன் நாட்டு விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
* மோரில் ஐஸ் போட்டு அருந்துவதால் எந்த பயனுமில்லை; மாறாக இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பலை, கொத்துமல்லி போட்டு அருந்துதல் நலம்.
* பாக்கெட் மோரைவிட வீட்டில் தயாரிக்கும் மோரே சிறந்ததாகும்.

ஒன்ஸ் மோர் ஒன்ஸ் மோர் என்று மோரை அருந்திக்கொண்டே இருப்பது சாலச் சிறந்தது.

Comments:
nalla thagavalkal.
 
விஜய்! உங்கள் மோர் தகவலுக்கு many more thanks..இதை அப்படியே காப்பி செய்து எனது "நம்பிக்கை" என்ற கூகுள் குழுமத்தில் இடவுள்ளேன். நன்றி!
 
Vijay yeh Dil Mange More More .. ;)
 
Vijay yeh Dil Mange More More .. ;)
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?