Friday, January 27, 2006

 

RE-MIX SONGS

எங்கு பார்த்தாலும் சமீபமாக ரீமிக்ஸ் பாடல்களாக கேட்டுக்கொண்டிருக்கிறது. குறும்பில் ஆரம்பித்து வரவிருக்கும் திருவிளையாடல் (பெயர் மாருமோ?) வரை பழையத் தமிழ் பாடல்களை தூசித்தட்டி வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ராகமும்,தாளமும் மாற்றியமைத்து ஜிலீரென்று புதிதாக வந்த வண்ணமாக உள்ளது. இதில் யுவனுக்கு கவலையில்லை; பாதிக்கு மேல் தந்தையுடையதாகும். மற்றவர்களுக்கு?

அனைத்து பாடல்களுமே நன்றாகத்தான் இருக்கிறது; ஆனால் மெல்லிசை மன்னர் காலத்தில் இருந்தவர்களுக்கு இதில் அவ்வளவாக நாட்டம் இருக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. மாறாக ஏன் இப்படி பழைய பாடல்களை சொதப்புகிறார்கள் என்று கூறுவார்கள். எனக்கு பிடித்த சில ரீமிக்ஸ்கள்...

ஆசை நூறு வகை (குறும்பு), என் ஆசை மன்மதனே (மன்மதன்), தொட்டால் பூ மலரும் (நியூ), அதோ அந்த பறவை (படம் -தெரியவில்லை) துள்ளுவதோ இளமை (சுக்ரன்) வரவிருக்கும் எனக்கு பிடித்த பாடல் - என்னம்மா கண்ணு சொளக்கியமா? (பிரகாஷ்ராஜ், தணுஷ் நடிக்கயிருப்பது). ராயல்டி, காப்பிரைட் போல் வரிகளை எடுத்தாள்வதற்கு பழைய பாடலாசிரியர்களுக்கு எதாவது ரெம்யூனரேஷன் கொடுப்பார்களா?


Comments: Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?