Thursday, June 09, 2005

 

Peak Hour Bus

Image hosted by Photobucket.com


சென்னை மாநகரிலே, மாநரகப் பேருந்தில் பயணம் செய்வதென்பது (அதுவும் பீக் ஹவர்ஸில்) சொல்லவும் வேண்டுமோ? ஏன் இந்த நிலைமை? அரசாங்கம் ஏன் அதிகமான அக்கறை காட்டமல்இருக்கிறது? என்னுடைய கற்பனையில் சிங்காரச் சென்னையின் பேருந்து....

*காலை மற்றும் மாலை வேளைகளில் குறிப்பிட்ட பள்ளிகள் இருக்கும் இடத்திற்கு (நான்கு/ஐந்து) பள்ளிகள் ஒருசேர இருக்கும் இடத்திற்கு சில பேருந்துகள் தனியாக - அதாவது மாணவர்களுக்காக மட்டுமே இயக்கலாம்.

*மாநரகப் பேருந்தை எதிர்ப்பார்க்காமல், வேலைக்குச் செல்லும் சில அரசாங்க ஊழியர்கள் கூட்டாகச் சேர்ந்து வேனில் பயணிக்கிறார்கள்.

*இதனை அரசாங்கமே சில தனியார் நிறுவனங்களுடன் இணைந்து சிறப்பாக பேருந்தை இயக்கலாம்பேருந்து எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் வரலாம்; ஆனால் பேருந்தில் கணிசமாக கூட்டம் குறைந்திருக்கும்.

*ஒரேடியாக மூன்று பேருந்துகளை ஒன்றன் பின் ஒன்றாக இயக்குவதைவிட சராசரியாக ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்தாக இயக்கலாம்.

*ஷேர் ஆட்டோ, வேன் போன்ற வாகனங்கள் நிறைய வந்தாலும் பேருந்தில் நெரிசல் மட்டும்குறையவேயில்லை.

*குறிப்பாக ஒரு பேருந்து நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு செல்ல தனியாக மேம்பாலங்களோ, சாலைகளோ அமைக்கலாம்.

*சகட்டுமேனிக்கு எஸ்.எம்.எஸ் போட்டி நடத்தும் வானொலிகள்,தொலைக்காட்சிகள் இந்த விஷயத்தை ஆராய்ந்து அரசுக்கு பல ஆலோசனைகளை வழங்கலாம்

*இப்படியெல்லாம் சிந்திக்காமல் மற்றவர்களை குறை கூரியே காலத்தைக் கழிக்கிறார்கள்நம் அரசாங்கத்தினர்.

Comments:
காலைல ஆபிஸுக்குப் போறதுக்குள்ள ரொம்ப அவஸ்தைப் படுறீங்க போலிருக்கு! அதான் இப்படி குமுறியிருக்கீங்க! இருக்கிற வசதிகளைவிட, சென்னைல மக்கள் கூட்டம் மூணு மடங்கு இருக்கே, என்ன செய்ய!
 
ஆமாம் முகில்.. கரெக்டாக கண்டுபிடித்துவிட்டீர்களே!!
 
உங்கள் சமூக அக்கறைக்கு ஒர் பாரட்டு
நன்றி

சனி பாகவன்
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?