Friday, April 22, 2005

 

April-22 World Earth Day

April 22 - உலக பூமி தினம்

நம்மில் எத்தனை பேர் இந்த பொன்னான பூமியைப் பற்றி சிந்திக்க நேரமிருக்கிறது!! இன்று உலக பூமி தினம்.(பொதுவாக காதலர் தினம்,சுதந்திர தினம், குடியரசு தினம் போன்றவற்றை நாடே கொண்டாடுகிறது) ஆனால் பூமித்தாயை போற்றுகின்ற நாள் ஒன்று இருப்பதே பல பேருக்கு தெரியாமல் இருக்கலாம். அமெரிக்காவில் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள்; நாமோ?! (சொல்லவும் வேண்டுமோ?)

பூமித்தாயைக் காப்பாற்றி நீருக்கடியிலிருந்து கொண்டு வந்தார் விஷ்ணு (வராக அவதாரமெடுத்து); அதனால்தான் என்னவோ வராகனுக்கு-நில அதிர்வை முன்கூட்டியே அறியமுடிகிறதோ!
பூமி அதிர்ச்சி, எரிமலை, போன்றவைகள் நிகழ்வதெல்லாம் இயற்கை மீது நாம் செலுத்தாத அக்கறை என்றே நினைக்கத் தோன்றுகிறது.

வளம் கொஞ்சும் பாரதத்தை உருவாக்க மரம் வளர்ப்போம். மரம் வளர்ப்போம் வளம் காப்போம்.
மழை நீர் சேகரிப்போம் - போன்ற பல சொற்றொடர்களை ஒருபுறம் தமிழக அரசு தன் பங்கிற்கு சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது; மறுபுறம் சாலையை அகலமாக்க மரங்களை வெட்டி வீழ்த்தியும்
வருகிறார்கள்.

பாரதியின் வரிகள்தான் நினைவிற்கு வருகிறது - நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைந்துவிட்டால்.........

இன்று இன்னொரு தினமாகவும் (என் வரையில்) கொண்டாடப்படுகிறது - நான் பிறந்த தினம்.

சரி நாளை என்ன தினம்? (இன்றைய தினமே பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை) நாளை?
நாளை (ஏப்ரல் 23 - உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம்) World Book & Copyright Day.

Comments:
கூகிள் முகப்பு பாருங்கள் :)
 
Post a Comment

<< Home

This page is powered by Blogger. Isn't yours?